சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
71   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 37 - வாரியார் # 50 )  

நிதிக்குப் பிங்கலன்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்
     தனத்தத் தந்தனம் ...... தனதான

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
     நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
     றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
     புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
     புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
     மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
     டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
     கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
Easy Version:
நிதிக்குப் பிங்கலன்
பதத்துக்கு இந்திரன்
நிறத்திற் கந்தனென்று
இனைவொரை
நிலத்திற் றன்பெரும் பசிக்கு
தஞ்சமென்றரற்றி
துன்பநெஞ்சினில்
நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து
சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு
உன்பதம் புணர்க்கைக்கு
அன்புதந்தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தை
மன்றினிலாடி
மழுக்கைக் கொண்டசங்கரர்க்குச் சென்று
வண்டமிழ்ச்சொற் சந்தமொன்று அருள்வோனே
குதித்துக் குன்று இடந்து அலைத்து
செம்பொனுங் கொழித்துக் கொண்ட
செந்திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பை
முன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

நிதிக்குப் பிங்கலன் ... செல்வத்துக்கு குபேரன் என்றும்,
பதத்துக்கு இந்திரன் ... நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும்,
நிறத்திற் கந்தனென்று ... பொன் போன்ற நிறத்துக்கு
கந்தப்பெருமான் என்றும்
இனைவொரை ... கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று,
நிலத்திற் றன்பெரும் பசிக்கு ... இந்த உலகத்தில் தன் பெரும்
பசியைப் போக்குதற்கு
தஞ்சமென்றரற்றி ... நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு,
துன்பநெஞ்சினில் ... துயரம் மிகுந்த மனதில்
நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்து ... தினமும் புதுப்புதுச்
சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி,
சங்கடம் புகட்டிக் கொண்டு உடம்பழிமாயும் ... சங்கடத்தில்
சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற
புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டு ... புலன்களால் வரும்
துன்பங்களைத் தொலைத்து,
உன்பதம் புணர்க்கைக்கு ... உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய
அன்புதந்தருள்வாயே ... அன்பினை வழங்கி அருள்வாயாக.
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் ... மனத்தில் கருதி,
வலிய திரிபுரத்தை புன்னகை செய்தே எரித்த
மறத்திற் றந்தை ... வீரம் மிகுந்த தந்தையாரும்,
மன்றினிலாடி ... அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிந்தவரும்,
மழுக்கைக் கொண்டசங்கரர்க்குச் சென்று ... மழுவைக் கரத்தில்
ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று,
வண்டமிழ்ச்சொற் சந்தமொன்று அருள்வோனே ... வளமான
தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே,
குதித்துக் குன்று இடந்து அலைத்து ... அலைகள் குதித்து,
குன்றுகளைத் தோண்டி அலைத்து,
செம்பொனுங் கொழித்துக் கொண்ட ... சிவந்த பொன்னையும்
கொழித்துத் தள்ளுகின்ற
செந்திலின்வாழ்வே ... திருச்செந்தூரின் செல்வமே,
குறப்பொற் கொம்பை ... குறவர்களின் பொன்னான குலக்கொடியாகிய
வள்ளியை
முன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. ...
முன்பு தினைப்புனத்தில் செம்மையான கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட
பெருமாளே.

Similar songs:

71 - நிதிக்குப் பிங்கலன் (திருச்செந்தூர்)

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்
     தனத்தத் தந்தனம் ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song